சிறுகதை எழுத்தாளர்களுக்கான எட்டு விதிகள்- குர்த் வோனகுத்.
- உனக்கு முழுக்க முழுக்க அந்நியனாக இருப்பவன் தன் நேரம் வீணாகி விட்டது என்று நினைத்துவிடாதபடிக்கு அவனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்.
- இவன் வெற்றி பெற வேண்டும் என்று வாசகன் விரும்புகிற மாதிரியான ஒரு பாத்திரத்தையாவது அவனுக்கு கதையில் கொடு.
- ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஏதாவது ஒரு வேட்கை இருக்க வேண்டும்- ஒரு டம்ளர் தண்ணீருக்காவது அவர்கள் ஆசைப்பட வேண்டும்.
- ஒவ்வொரு வாக்கியமும் இந்த இரண்டில் ஒன்றைச் செய்ய வேண்டும்- பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்துவது, அல்லது கதையின் ஓட்டத்தை முன் நகர்த்துவது.
- முடிவுக்கு வெகு அருகில் துவங்குங்கள்.
- கொடூரனாக இருங்கள். உங்கள் கதையின் பிரதான பாத்திரங்கள் எவ்வளவு இனிமையானவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருந்தாலும், அவர்களுக்கு கொடுங்காரியங்கள் நிகழ்த்துங்கள்- வாசகன் அவர்களின் இயல்பை புரிந்து கொள்ள அது உதவும்.
- ஒருவரை மட்டும் மகிழ்விக்க எழுதுங்கள். நீங்கள் உங்கள் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு உலகறிய கில்மா செய்தால்- இப்படிச் சொல்லலாம் - உங்கள் கதைக்கு நிமோனியா வந்து விடும்.
- உங்கள் வாசகர்களுக்குத் தேவையான தகவல்களை எவ்வளவு விரைவாகத் தர முடியுமோ அவ்வளவு விரைவாகவும் விரிவாகவும் கொடுத்து விடுங்கள். சஸ்பென்ஸ் நாசமாய் போகட்டும். வாசகர்களுக்கு எங்கே, ஏன், என்ன நடக்கிறது என்பன முழுமையாக புரிந்திருக்க வேண்டும்- கரப்பான்பூச்சிகள் கடைசி சில பக்கங்களைத் தின்றுவிட்டால் மிச்ச கதை அவர்களாகவே முடித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.